விற்பனையாளனாய் நிற்கிறேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19: 11-13.
11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
கிறித்துவில் வாழ்வு:
திரும்பி வந்து பார்க்கும் வரைக்கும்,
திரவியம் கொடுத்துச் சென்றவரே,
விரும்பி நானும் உம் சொற்படியே,
வீதியில் கடையை விரித்தேனே.
பெருஞ்செல்வருக்கே விற்பனை செய்யும்,
பேரங்காடிகள் திறக்காமல்,
வெறுங்கையோடு நிற்பவருக்கும்,
விண்ணருள் பகிரப் பிரித்தேனே!
ஆமென்.