அறுப்பவர் வரலாறு!

அறுப்பவர் வரலாறு!

மறுப்பவர் என்று தொடங்குபவர்,
மனதில் வேறாய் மாறுகிறார்.
வெறுப்பவர் என்று வளருமவர்,
வெறித்தன வேராய்த் தேறுகிறார்.
பொறுப்பவர் என்று மாறாதார்,
பொறுமை அற்றுச் சீறுகிறார்.
அறுப்பவராகி அறுபடுவார்,
அழிவுப் பாதை கூறுகிறார்!

-கெர்சோம் செல்லையா.

குதிரையா? கழுதையா?

குதிரையா? கழுதையா?

பதின்மடங்காகப் பயன் தந்தாலும்,

பணியும் கழுதையை விரும்பாமல்,

அதிவிரைவாகப் பகைவருள் பாயும்,

அரபுக் குதிரையை விரும்புகிறோம்.

எதிரியை நண்பர் என்று ஏற்கும்,

இயேசுவோ அப்படிப் பாராமல்,

குதிரை அல்ல, கழுதை கேட்டார்;

கழுதையில் அமைதி திரும்பிடுவோம்!


-கெர்சோம் செல்லையா.

உண்மை உண்டோ?

உண்மை உண்டோ?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:11-12.

11  அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

12  வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

கிறித்துவில் வாழ்வு:

உண்மை என்றால் என்னவென்று,

உலகோர் கேட்கும் காலமிது.

நன்மை செய்யும் இறையுமின்று,

நம்முள் தேடும் பண்புமிது.

அன்றே கொன்ற நாட்களன்று;

அரசிலும் தேடவேண்டுமிது.

என்றானாலும் சொல்வேன் ஒன்று;

இன்றும் விடுதலை கொடுக்குமிது!

ஆமென்.

ஐந்து காசு உண்மை!

ஐந்து காசு உண்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:10.

10  கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

கிறித்துவில் வாழ்வு:

ஐந்து காசு இருந்தபோது,

அதையே ஏய்த்து எடுத்தவர்,

வந்து கொட்டும் கோடி கண்டு,

வடி கட்டாமல் போவாரா?

சொந்த வீட்டில் உண்மையற்று,

சீர் அழியச் செய்பவர்,

இந்த நாட்டை ஆள்வதற்கு, 

ஏற்ற தலை ஆவாரா?

ஆமென்.