கண்ணில் காணும் ஏழை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:19-21.
19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
கிறித்துவில் வாழ்வு:
விண்ணில் ஆளும் இறைதான் இன்று,
வீட்டின் முன்னே கிடக்கின்றார்.
கண்ணில் கண்டும் ஏழையர் என்று,
கனியார் கல்போல் கடக்கின்றார்.
மண்ணில் இறையைத் தேடிக் கொண்டு,
மதியார் மலையிலும் நடக்கின்றார்.
உண்ணும் வீட்டில் கொடாரைக் கண்டு,
ஒளியும் இறையோ அடக்கின்றார்!
ஆமென்.