நட்பு

நட்பின் நாள் வாழ்த்து!

மாற்று சமய மனிதரையும்
மதித்துத் தம்முடன் சேர்ப்போர் யார்?

நேற்று வெறுத்து விட்டதினால்
நிகழ்ந்த பிளவைப் பார்ப்போர் யார்?

காற்று, மழை நீர், நெருப்பாக,
கடவுளின் இணைப்பைக் கோர்ப்போர் யார்?

தூற்றுவோரும் பின்வருவார்;
தூய அன்பை வார்ப்போர் யார்?

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

வேற்றுமைகள் இருந்தாலும்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:38-40.
“அப்பொழுது யோவான் இயேசுவிடம், ‘ போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ‘ என்றார். அதற்கு இயேசு கூறியது: ‘ தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
நற்செய்தி மலர்:
மாற்று அவையின் கிறித்தவரை,
மதிக்க மறக்கும் கிறித்தவரே,
நேற்று இப்படிப் பிரித்ததினால்,
நிகழ்ந்த தீமையும் அறிவீரே.
தோற்று போகும் அலகையவன்,
தொடுக்கும் அம்பு பிரிவாமே.
வேற்றுமைகள் இருந்தாலும்,
வேண்டும் அன்பு உறவாமே!
ஆமென்.

Image may contain: sky and one or more people
LikeShow More Reactions

Comment

வேற்றுமைகள் இருந்தாலும்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:38-40.
“அப்பொழுது யோவான் இயேசுவிடம், ‘ போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ‘ என்றார். அதற்கு இயேசு கூறியது: ‘ தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.”
நற்செய்தி மலர்:
மாற்று அவையின் கிறித்தவரை,
மதிக்க மறக்கும் கிறித்தவரே,
நேற்று இப்படிப் பிரித்ததினால்,
நிகழ்ந்த தீமையும் அறிவீரே.
தோற்று போகும் அலகையவன்,
தொடுக்கும் அம்பு பிரிவாமே.
வேற்றுமைகள் இருந்தாலும்,
வேண்டும் அன்பு உறவாமே!
ஆமென்.

Image may contain: sky and one or more people
LikeShow More Reactions

Comment

பிள்ளையைப் பார்த்துப் பயில்வோம்!

பிள்ளையைப் பார்த்து, கற்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:35-37.
“அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், ‘ ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் ‘ என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, ‘ இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பிள்ளை நெஞ்சில் பெருமை இல்லை;
பேச்சு, செயலில் கருமை இல்லை.
கள்ளச் சிரிப்பு என்றும் இல்லை;
கயமையென்று ஒன்றும் இல்லை.
உள்ளம் இதுபோல் நம்மில் இல்லை;
உணராதிருக்க பொம்மை இல்லை.
பள்ளம் விழுந்தோம் எழும்பவில்லை;
பலநாள் படுக்க நாம், குழந்தையுமில்லை!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

யாவரும் ஒன்றே

யாவரும் இணையெனப் பாரீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:33-34.
” அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ‘ வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ‘ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
தன்னைப் பெரியவன் என்றே எண்ணித்
தவறாம் ஏணியில் ஏறுகின்றார்.
முன்னால் எழும்பும் ஏழையைத் துரத்தி,
முழுப் பகையாலே சீறுகின்றார்.
இன்னாள் இதையே சாதியென்றாக்கி,
ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றார்.
என்னாளாயினும் மாறா இறையோ,
யாவரும் இணையென அளக்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

பிறந்த நோக்கம்

உலகில் வந்த நோக்கம் அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:30-32.
“அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ‘ மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.”

நற்செய்தி மலர்:
என்றோ ஒரு நாள் இறப்பது அறிவோம்.
என்று எப்படி என்பதை அறியோம்.
இன்று இதனைத் தெரியார் போன்று,
அன்று அடியார் நின்றதும் அறிவோம்.

ஓன்று மட்டும் தெரிந்து கொள்வோம்.
உலகில் வந்த நோக்கம் தெளிவோம்.
தொன்று தொட்டு ஆளும் இறையின்
தூய திட்டம் புரிந்து வாழ்வோம்!
ஆமென்.

Image may contain: water, ocean, outdoor, one or more people and nature
LikeShow More Reactions

Comment

பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?

பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:28-29.
“அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ‘ அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும்) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது’ என்றார்.”

நற்செய்தி மலர்:

எந்த பேயும் நடுநடுங்கும்;
எந்த பெயரும் அடங்கிவிடும்.

அந்த திருப்பெயர் அறிவோமா?
அவரை நம்மில் பெறுவோமா?

இந்த நாளிலும் இது உண்மை;
இயேசு பெயரின் வல்லமை.

சொந்த அறிவில் சொல்கின்றேன்;
சொத்தாம் இயேசுவில் வெல்கின்றேன்!

ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?

இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:25-27.
“அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ‘ ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ‘ என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ‘ அவன் இறந்துவிட்டான் ‘ என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
இறந்தவர் எழுந்ததை மறப்பாரோ?
மறையுரை வாக்கை வெறுப்பவரோ
மறைகிறார், இதையும் மறுப்பாரோ?
பிறை நிலவாகவே நான் தேய்ந்தேன்.
பிழைகளின் பெருக்கில்தான் மாய்ந்தேன்.
நிறைவின் உருவில் இயேசு வந்தார்;
நெஞ்சைக் கொடுத்தேன், உயிர் தந்தார்!
ஆமென்.

Image may contain: sky, tree, night, nature and outdoor
LikeShow More Reactions

Comment

இயலும் என்று நம்பாமல்…

இயலும் என்று நம்பாமல்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:20-24.
” அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘ இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ‘ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ‘ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘ இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ‘ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘ நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ‘ என்று கதறினார்.”

நற்செய்தி மலர்:
இயலும் என்ற நம்பிக்கை
இயேசுவில் வந்தால், பற்றாகும்.
முயலும் பார்ப்போம், என்பதுவோ
முற்றிலும் நம்பாக் கூற்றாகும்.
செயலில் விருப்பைக் காண்பதற்குச்
சிறிய குழந்தை போல் கேளும்.
வயலும் ஒருநாள் வாழ்வு தரும்;
வந்து நம்பி நிலத்தை உழும்!
ஆமென்,

புளிப்பு எது? இனிப்பு எது?

புளிப்பு எது? இனிப்பு எது?

வெளியே தெரியும் தோற்றம் கண்டு,
வெறுப்போ விருப்போ கொள்கின்றோம்.
எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு,
இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம்.
தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும்
திசையின் வழியையோ மறுக்கின்றோம்.
புளிப்பா? இனிப்பா? புரியாதவராய்
பொய்மையில்தானே இருக்கின்றோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: cloud, sky and outdoor
LikeShow More Reactions

Comment