விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

யாதும் ஊரே, யாவரும் உறவே,
என்பது தானே பண்பாடு.
சூதும் தீதே, சூழ்ச்சியும் அதுவே;
சொன்னபடியே, பண் பாடு.
வாதும் கேடே, வளர்ப்பவர் கெட்டே
வாடுவார் என்றதே இந்நாடு.
போதும் தீங்கே, புரிந்தார் எங்கே?
புது வாழ்வையே இனி நாடு!

-கெர்சோம் செல்லையா.