சாதி!

சாதி!

சாதியைப் படைத்தவன் இறைவனல்ல,
சதி செய்திட்ட மனிதனே.
நீதியைப் பார்ப்பவன் அறிவிலியல்ல;
நெஞ்சைத் தொட்ட புனிதனே.
வீதியைப் பிரித்து வைப்பது நல்ல
வழிமுறை அல்ல, மனிதனே.
மீதி வாழ்விலே இணைந்து நல்ல
மனிதனால், புனிதனே!

-செல்லையா.