இயேசுவை அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:27-30.
“இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள். ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.”
நற்செய்தி மலர்:
யார் எனத் தெரியாமல் இயேசுவை வெறுத்தேன்;
எல்லாம் தெரிந்ததாய் அறிவினை மறுத்தேன்.
வேர் முதல் காய் வரை வேறு பிரித்தேன்;
வேண்டாம் கனியென தோலும் உரித்தேன்.
போர் வெறி கொண்டு நான் புனிதனைத் தடுத்தேன்;
புரிந்திடும் ஆவியைப் பெற்றபின் அடுத்தேன்.
நேர்வழி செல்வதே எளிதெனப் புரிந்தேன்;
நிம்மதி அங்கே, இயேசுவைத் தெரிந்தேன்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
Category: Uncategorized
நடக்கிற மரமாய்
நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!
நற்செய்தி மாலை: மாற்கு 8:22-26.
“அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, ‘ ஏதாவது தெரிகிறதா? ‘ என்று கேட்டார். அவர் நிமிர்ந்து பார்த்து, ‘ மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள் ‘ என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். இயேசு அவரிடம், ‘ ஊரில் நுழைய வேண்டாம் ‘ என்று கூறி அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.”
நற்செய்தி மலர்:
நடக்கிற மரமாய்க் கிடக்கிற மனிதா!
நன்மை உன்னில் கிடைக்குமோ எளிதா?
கடக்கிற ஆறும் கரையினுக்குதவும்;
கடலினில் விழுமுன் கனிமரம் வளர்க்கும்.
உடைக்கிற நீயோ, யாருக்கு வேண்டும்?
உண்மை இதுதான், உனக்கே புரியும்.
படைக்கிற இறையின் வாக்கினைக் கேட்பாய்;
பணிவுடன் ஏற்று, பயன்தனில் மகிழ்வாய்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அற்புதம் கண்டும்…..
நற்செய்தி மாலை: மாற்கு 8:19-21.
விண்ணின்று வந்தால்தான்….
விண்ணின்று வந்தால்தான்….
புளித்த மாவைப்போன்று…
புளித்த மாவைப்போன்று…
வேறு அடையாளம் வேண்டாம்!
வேறு அடையாளம் வேண்டுமா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:10-13.
“உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார். பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ‘ இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
விண்ணில் வேறோர் அடையாளம்,
வேண்டிக் கேட்கும் நண்பர்களே,
கண்ணில் காணும் காட்சிகளும்
கடவுள் உண்டெனும் சான்றுகளே!
மண்ணும் விண்ணும் சான்றுரைத்தும்,
மதிநூல் வாக்கது போன்றுரைத்தும்,
எண்ணிப் பார்க்க நீர் விரும்பலையே!
இனிமேல் எதற்கு அடையாளமே?
ஆமென்.
இனியாவது மாறுவோம்!
இனியாவது மாறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:7-10.
“சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
இல்லை உணவு என்போர் கண்டு,
இரங்கிக் கொடுத்தல் தொண்டு.
சொல்லில் மட்டும் அன்பு கொண்டு,
சுற்றித் திரிவரும் உண்டு!
எல்லாம் ஈயும் இயேசு போன்று,
இனிமேல் மாறுதல் நன்று.
அல்லாவிடில் கிறித்தவர் என்று,
அழைப்பதும் தவறு இன்று!
ஆமென்.
நன்றியாய் வாழ்தல்
இல்லாமையிலும் நன்றி!
நற்செய்தி மாலை: மாற்கு 8:4-6.
நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்
நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம்!
“அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ‘ நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் ‘ என்று கூறினார்.”
நன்மையே வரட்டும்!
நன்மை வரட்டும்!
எம்மா வலிய முதல்வர் வேண்டும்?
சும்மா அவர் இவர் என்றில்லாமல்,
அம்மாவேதான் ஆளவேண்டும்,
என்றார் நமது நாட்டின் மக்கள்;
நன்றாய் எடுத்த முடிவாகட்டும்.
வென்றார் வீழ்ந்தார் என்றில்லாமல்,
ஒன்றாய் உழைப்பீர், நன்மை வரட்டும்!