வேறு அடையாளம் வேண்டாம்!

வேறு அடையாளம் வேண்டுமா?
நற்செய்தி மாலை: மாற்கு 8:10-13.
“உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார். பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, ‘ இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.”
நற்செய்தி மலர்:
விண்ணில் வேறோர் அடையாளம்,
வேண்டிக் கேட்கும் நண்பர்களே,
கண்ணில் காணும் காட்சிகளும்
கடவுள் உண்டெனும் சான்றுகளே!
மண்ணும் விண்ணும் சான்றுரைத்தும்,
மதிநூல் வாக்கது போன்றுரைத்தும்,
எண்ணிப் பார்க்க நீர் விரும்பலையே!
இனிமேல் எதற்கு அடையாளமே?
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

Leave a Reply