யார் எனத்தெரியாது…

இயேசுவை அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:27-30.
“இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ‘ நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ‘ என்று கேட்டார். அதற்கு அவர்கள் அவரிடம், ‘ சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ‘ என்றார்கள். ‘ ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ‘ என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா ‘ என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.”
நற்செய்தி மலர்:
யார் எனத் தெரியாமல் இயேசுவை வெறுத்தேன்;
எல்லாம் தெரிந்ததாய் அறிவினை மறுத்தேன்.
வேர் முதல் காய் வரை வேறு பிரித்தேன்;
வேண்டாம் கனியென தோலும் உரித்தேன்.
போர் வெறி கொண்டு நான் புனிதனைத் தடுத்தேன்;
புரிந்திடும் ஆவியைப் பெற்றபின் அடுத்தேன்.
நேர்வழி செல்வதே எளிதெனப் புரிந்தேன்;
நிம்மதி அங்கே, இயேசுவைத் தெரிந்தேன்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.

Leave a Reply