இனியாவது மாறுவோம்!


​இனியாவது மாறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 8:7-10.
“சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.”

நற்செய்தி மலர்:
இல்லை உணவு என்போர் கண்டு,
இரங்கிக் கொடுத்தல் தொண்டு.
சொல்லில் மட்டும் அன்பு கொண்டு,
சுற்றித் திரிவரும் உண்டு!
எல்லாம் ஈயும் இயேசு போன்று,
இனிமேல் மாறுதல் நன்று.
அல்லாவிடில் கிறித்தவர் என்று,
அழைப்பதும் தவறு இன்று!
ஆமென்.

Leave a Reply