யாவரும் ஒன்றே

யாவரும் இணையெனப் பாரீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:33-34.
” அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, ‘ வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்? ‘ என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
தன்னைப் பெரியவன் என்றே எண்ணித்
தவறாம் ஏணியில் ஏறுகின்றார்.
முன்னால் எழும்பும் ஏழையைத் துரத்தி,
முழுப் பகையாலே சீறுகின்றார்.
இன்னாள் இதையே சாதியென்றாக்கி,
ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றார்.
என்னாளாயினும் மாறா இறையோ,
யாவரும் இணையென அளக்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

பிறந்த நோக்கம்

உலகில் வந்த நோக்கம் அறிவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:30-32.
“அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், ‘ மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.”

நற்செய்தி மலர்:
என்றோ ஒரு நாள் இறப்பது அறிவோம்.
என்று எப்படி என்பதை அறியோம்.
இன்று இதனைத் தெரியார் போன்று,
அன்று அடியார் நின்றதும் அறிவோம்.

ஓன்று மட்டும் தெரிந்து கொள்வோம்.
உலகில் வந்த நோக்கம் தெளிவோம்.
தொன்று தொட்டு ஆளும் இறையின்
தூய திட்டம் புரிந்து வாழ்வோம்!
ஆமென்.

Image may contain: water, ocean, outdoor, one or more people and nature
LikeShow More Reactions

Comment

பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?

பேய்கள் நடுங்கும் பெயர் எதுவோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:28-29.
“அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ‘ அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் (நோன்பினாலும்) அன்றி வேறு எதனாலும் வெளியேறாது’ என்றார்.”

நற்செய்தி மலர்:

எந்த பேயும் நடுநடுங்கும்;
எந்த பெயரும் அடங்கிவிடும்.

அந்த திருப்பெயர் அறிவோமா?
அவரை நம்மில் பெறுவோமா?

இந்த நாளிலும் இது உண்மை;
இயேசு பெயரின் வல்லமை.

சொந்த அறிவில் சொல்கின்றேன்;
சொத்தாம் இயேசுவில் வெல்கின்றேன்!

ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?

இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
நற்செய்தி மாலை: மாற்கு 9:25-27.
“அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ‘ ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ‘ என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ‘ அவன் இறந்துவிட்டான் ‘ என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் தொட்டபின் இறப்பாரோ?
இறந்தவர் எழுந்ததை மறப்பாரோ?
மறையுரை வாக்கை வெறுப்பவரோ
மறைகிறார், இதையும் மறுப்பாரோ?
பிறை நிலவாகவே நான் தேய்ந்தேன்.
பிழைகளின் பெருக்கில்தான் மாய்ந்தேன்.
நிறைவின் உருவில் இயேசு வந்தார்;
நெஞ்சைக் கொடுத்தேன், உயிர் தந்தார்!
ஆமென்.

Image may contain: sky, tree, night, nature and outdoor
LikeShow More Reactions

Comment

இயலும் என்று நம்பாமல்…

இயலும் என்று நம்பாமல்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:20-24.
” அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘ இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ‘ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ‘ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘ இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ‘ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘ நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ‘ என்று கதறினார்.”

நற்செய்தி மலர்:
இயலும் என்ற நம்பிக்கை
இயேசுவில் வந்தால், பற்றாகும்.
முயலும் பார்ப்போம், என்பதுவோ
முற்றிலும் நம்பாக் கூற்றாகும்.
செயலில் விருப்பைக் காண்பதற்குச்
சிறிய குழந்தை போல் கேளும்.
வயலும் ஒருநாள் வாழ்வு தரும்;
வந்து நம்பி நிலத்தை உழும்!
ஆமென்,

புளிப்பு எது? இனிப்பு எது?

புளிப்பு எது? இனிப்பு எது?

வெளியே தெரியும் தோற்றம் கண்டு,
வெறுப்போ விருப்போ கொள்கின்றோம்.
எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு,
இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம்.
தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும்
திசையின் வழியையோ மறுக்கின்றோம்.
புளிப்பா? இனிப்பா? புரியாதவராய்
பொய்மையில்தானே இருக்கின்றோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: cloud, sky and outdoor
LikeShow More Reactions

Comment

நம்பிக்கையற்றவரே!

நம்பிக்கையற்ற தலைமுறையே!

நற்செய்தி மாலை: மாற்கு 9:16-19.
“அவர் அவர்களை நோக்கி, ‘ நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘ போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ‘ என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘ நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:

நம்பிக்கை அற்ற தலைமுறையே,
நன்கு நோக்கு உன் குறையே!

கும்பிடச் செல்லும் கோயிலிலே,
கிறித்தவன் என்பதில் பயனிலையே!

எம்பி நிற்கவும் வலுவற்றே,
ஏழையர் கிடக்கிறார், பார் சற்றே!

தும்பிக் கையாய் நீ இன்றே,
தூக்கி உயர்த்து, இது நன்றே!

ஆமென்.

Image may contain: outdoor and nature
LikeShow More Reactions

Comment

மானம் காக்கும் பெரியார்!

மானம் காக்கும் பெரியார்!

உடலை மறைக்கவே உடையாம்;
ஊருக்குத் திறப்பின் கடையாம்.
கடவுள் அளித்த கொடையாம்,
கற்பு நமது படையாம்.

திடல்போல் திறந்து திரிவார்,
தெய்வ வழியைத் தெரியார்.
மடமை விட்டுப் புரிவார்,
மானம் காக்கும் பெரியார்!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person
LikeShow More Reactions

Comment

வாதாடும் மாந்தர்

வாதாடும் மாந்தரெல்லாம்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:14-15.
“அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.”

நற்செய்தி மலர்:
வாதாடும் மாந்தரெல்லாம்
வாழ்த்தித்தான் தொடங்குகிறார்.
சூதாடும் போர் மறைக்கச்
சொற்கிடங்காய் மடங்குகிறார்.
தீதாடும் நிலை உணரார்,
தேய்ந்தோட மயங்குகிறார்.
தூதோடு வாழ்பவர்தான்,
தெய்வத்தால் இயங்குகிறார்!
ஆமென்.

Image may contain: drawing
LikeShow More Reactions

Comment

எலியா போன்று பேசு!

எலியா போல் பேசுகின்ற இறைமக்கள்!
நற்செய்தி மாலை: மாற்கு 9:11-13.
“அவர்கள் அவரிடம், ‘ எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்? ‘ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி? ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
நலிந்தோரை நசுக்குகின்ற
நஞ்சான உலகிலே,
எலியா போல் பேசுகின்ற
இறைமக்கள் தாருமே.
மெலிந்தோரை மீட்டிடவே,
பலியான இயேசுவே,
வலிந்து அழைத்தோமே;
வாழ்விக்க வாருமே!
ஆமென்.

Image may contain: outdoor, one or more people and text
LikeShow More Reactions

Comment