எண்பதும்! இருபதும்!

எண்பதும் இருபதும்!


ஐந்தில் ஒன்றை அடிக்க இன்று,

ஐந்தில் நான்கு துடிக்கிறது.

மந்தை ஒன்றைத் திரட்டிச் சென்று,

மத வெறியாலே பிடிக்கிறது.

“இந்திய நாட்டின் மக்கள் ஒன்று”

என்னும் நினைப்பே வெடிக்கிறது.

எந்தன் காலே, தலைமேல் நின்று,

என் உயிரைக் குடிக்கிறது!


-கெர்சோம் செல்லையா.