இவள் இங்கே! அவன் எங்கே?

இவள் இங்கே! அவன் எங்கே?


நற்செய்தி: யோவான் 8:1-5. 

நல்வழி:  

இருவர் செய்த குற்றம்,

என்று சொல்லும் சுற்றம்,

ஒருவரையே அடிப்பின்,

ஒழிக அதன் கொற்றம் .

பெருகும் அருள் திட்டம்,

பேசும் அன்பு வட்டம்,

தருபவரைப் பிடிப்பின்,

தவறுகள் தரை மட்டம்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

இகழ்வாய்ப் பார்த்தல்!

இகழ்வாய்ப் பாராதீர்!


நற்செய்தி: யோவான் 7:52-53.  

நல்வழி:

கல்வி, கேள்வி, பொருளியல் வாழ்வில்,

கரை சேராத கலிலியரை,

நல்லறிவாளர் வரிசையில் வையார்,

நன்கு கற்ற அந்நாட்டார்.

எல்லோருக்கும் அறிவைப் புகட்டும்,

இறையோ அன்று தம் மகனை,

இல்லா ஊரில் வளரச் செய்தார்;

இதைக் கற்பாரா இந்நாட்டார்?


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

மறுபக்கமும் பாருங்கள்!

  1. யோவான் 7;50-51.

நல்வழி:

குற்றம் சாட்டப்பட்டோர் சொல்லும்,

கூற்றின் உண்மை பாராமல்,

ஒற்றைச் சட்டம் கேட்டுக் கொல்லும்,

ஒழுங்கீனத்தைச் செய்யாதீர்.

கற்றக் கல்வி, திறமையுரைக்கும்,


காத்தல் யாத்தல் செய்யாமல், 

சுற்றுச் சூழல் அழிந்திறக்கும், 

சேதப் பணியும் செய்யாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

பழிச்சொல் தவிர்ப்போம்!

பழிச் சொல் தவிர்ப்போம்!

நற்செய்தி: யோவான் 7:47-49.

47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

நல்வழி:

செழித்து வாழும் எண்ணம் இருந்தால்,

சிந்திப்போம் நாம்  இறை வாக்கை. 

அழித்து ஆட்டம் போட்டவர் எங்கே?

அழிவில் முடிந்தது அவர் வாழ்க்கை. 

பழித்து ஏசும் தவறும் வேண்டாம்; 

பகையின் தொடக்கம் சிறிதாகும். 

விழித்து எழுந்து நன்மை செய்வோம்;

விரும்பாத் தீங்கை அரிதாக்கும்!


ஆமென். 


-கெர்சோம்  செல்லையா.

யோவான் 7:44-46.

நல்வழி:

பேச்சின் சிறப்பை இயேசுவில் கண்டு,

பிடிக்கப் போனோர் திரும்புகிறார். 

மூச்சாம் அன்பை வாழ்வில் கண்டு,

முடிவை மாற்றி, விரும்புகிறார். 

ஏச்சால் பலபேர் இகழ்தல் கண்டு, 

இறைவழி விட்டு திரும்பாதீர். 

நீச்சல் மாறும், நிறைவும் பாரும்;

நெறியிலா வாழ்வை விரும்பாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

தெரியாமல் பேசுகிறார்!

யோவான் 7: 40-43.

நல்வழி:


என்ன எதுவென அறியார் இன்று,

எழுந்து திரை முன் பேசுகிறார். 

சொன்ன சொல்லின் ஆழம் சென்று,

சோதிக்காமல், ஏசுகிறார். 

இன்ன வகையில் இருத்தல் அன்று;

ஏசுவின் அடியார் தேடுகிறார். \

பின்னல் சிக்கு பிரித்தல் நன்று. 

பேறு பெற்றோர் பாடுகிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

ஆவியர் அருளாறு!

ஆவியர் அருள்!


நற்செய்தி: யோவான் 7:37-39.

நல்வழி:


ஆறாய் ஓடும் ஆவியர் அருளை,

அடைவாய் அன்பா, வருவாயே. 

தேறாதழிக்கும் தீவினை களைய,

தெய்வ வாக்கும் பெறுவாயே.

பேறாய் வழியும் பேரின்பத்தை, 

பிறரும் அடையத் தருவாயே.

கூறாதிருப்பின், பழி எனக்காகும்;

கீழ்ப்படிந்தால், திருவாயே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

உடன் வருவது என்ன?

உடன் வருவது என்ன?


தொட்டுச் சுவைக்கின்ற,

தொள்ளாயிரத்து இன்பம்

விட்டுச் செல்லுகையில்,

விண் வழி  வர மறுக்க,

கிட்டும் இறையருளாம்,

கிறித்தின் மீட்புமட்டும்,

ஒட்டிப் பிடிப்பதென்ன?

உணர்வோரே, பெருகுக!

-கெர்சோம் செல்லையா.

வெவ்வேறு விதம்!

வெவ்வேறு கருத்துகள்!
நற்செய்தி: யோவான் 7:36.


36. நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.  


நல்வழி:


பொருளறியாமல் புரட்டிப் பேசும்,

புனைவார் அலையும் புவியதனில், 

அருளின் வாக்கும் தலைகீழாகும்;

அன்னார் கலைகள் பரவுமெனில்.

இருளை இருளாய்க் காணும் கண்கள்,

என்னில் தாரும் நல் இறையே.

திருவருளால்தான் ஒளியே தெரியும்;

தெளிவு என்றும் உன் நிறைவே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

கோடி அருள்!

கோடி அருள்!

சினத்தால் அழிந்தோர் சில கோடி.

சிந்தியாதழிவோர் பல கோடி.

நினைத்தால் அழிக்கும் வெறி தேடி,

நீக்கார் விழுவார் வலு வாடி.

பிணத்தின் அமைதி போல் நாடி,

பேசாதிருப்பின் நல் நாடி.

மனத்தால் நாளும் இறை கூடி,

மன்னிப்பதாலே அருள் கோடி!

-கெர்சோம் செல்லையா.