பழிச்சொல் தவிர்ப்போம்!

பழிச் சொல் தவிர்ப்போம்!

நற்செய்தி: யோவான் 7:47-49.

47. அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
48. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
49. வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

நல்வழி:

செழித்து வாழும் எண்ணம் இருந்தால்,

சிந்திப்போம் நாம்  இறை வாக்கை. 

அழித்து ஆட்டம் போட்டவர் எங்கே?

அழிவில் முடிந்தது அவர் வாழ்க்கை. 

பழித்து ஏசும் தவறும் வேண்டாம்; 

பகையின் தொடக்கம் சிறிதாகும். 

விழித்து எழுந்து நன்மை செய்வோம்;

விரும்பாத் தீங்கை அரிதாக்கும்!


ஆமென். 


-கெர்சோம்  செல்லையா.