கோடி அருள்!

கோடி அருள்!

சினத்தால் அழிந்தோர் சில கோடி.

சிந்தியாதழிவோர் பல கோடி.

நினைத்தால் அழிக்கும் வெறி தேடி,

நீக்கார் விழுவார் வலு வாடி.

பிணத்தின் அமைதி போல் நாடி,

பேசாதிருப்பின் நல் நாடி.

மனத்தால் நாளும் இறை கூடி,

மன்னிப்பதாலே அருள் கோடி!

-கெர்சோம் செல்லையா.