ஆவியர் அருள்!
நற்செய்தி: யோவான் 7:37-39.
நல்வழி:
ஆறாய் ஓடும் ஆவியர் அருளை,
அடைவாய் அன்பா, வருவாயே.
தேறாதழிக்கும் தீவினை களைய,
தெய்வ வாக்கும் பெறுவாயே.
பேறாய் வழியும் பேரின்பத்தை,
பிறரும் அடையத் தருவாயே.
கூறாதிருப்பின், பழி எனக்காகும்;
கீழ்ப்படிந்தால், திருவாயே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.