ஒவ்வொரு படைப்பும் கண்டு,

இறையே மகிழ்வு கொண்டு,

அவ்வகை அனைத்தும் நன்று,

என்று சொன்னார் அன்று.

இவ்வித படைப்பில் மிக நன்று

,எதுவெனக் கேட்பார் இன்று.

எவ்விதத்திலும் மனிதனென்று,

இறை வாக்குரைப்பதுண்டு.

இப்படிச் சொல்கிற போது

எப்படி என்பாருமுண்டு.

தப்புகள் நீங்கும் என்று,

தருகிறேன் ஏது இன்று.

ஒப்பிலாப் பிறவி மனிதர்;

உண்மையில் இறை சாயல்.

அப்படியாகத்தான் படைத்தார்;

அனைவரையுமே அன்று!

(தொடக்க நூல் 1:4-27)

May be an image of 4 people and text that says 'GOD created man in his own IMAGE. GENESIS 1:27 ChristianQuotes.info'