தாய்க்கொரு காப்பகம்!

தாய்க்கொரு காப்பகம்!

இறை மொழி: யோவான்:19:25-27.

25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

இறை வழி:

கதியற்று நிற்கும் தாயைக் கண்டு,

கை விட்டு ஓடும் பிள்ளைகளே,

விதியென்று இயேசு உரைத்தது கேட்டு,

விரையும் யோவான் பாருங்களே.

மதியற்று மனிதர் தள்ளுதல் கண்டு,

மறு வாழ்வளிக்கும் உள்ளங்களே,

துதி புகழ் அல்ல, தூக்கும் சிலுவை;

துன்பில் இன்பம் சேருங்களே!

ஆமென்.

May be a black-and-white image of one or more people