தாழ்மை!

தாழ்மையின் அடையாளம்!

இறைவாக்கு: யோவான் 13: 2-5.

  1. சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
  2. தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
  3. போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
  4. பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இறைவாழ்வு:

தாழ்மை என்ற சொல்லின் பொருளை,
தலைவர் இயேசு தருகின்றார்.
வாழ்வை வழங்கும் பணியில் சிறுமை
வந்தும் அன்பில் பெறுகின்றார்.
ஏழ்மை என்பது எண்ணில் அல்ல;
எண்ணம் என்று விளக்குகிறார்.
பாழாய்ப் போன நெஞ்சு கொடுப்போம்;
பண்பட இயேசு துலக்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.