பொய்! பொய்!

பொய்! பொய்!

சின்னவனும் சொல்கிறான் பொய்.
பெரியவரும் சொல்கிறார் பொய்.
என்னகமும் சொல்லியது பொய்.
எங்கும் பொய், எதிலும் பொய்.
சொன்னதினால் வந்ததென்ன? பொய்!
சொத்து, மதிப்பு, யாவுமே பொய்.
இன்னிலையில் எங்குளதோ மெய்?
இறையிடம் பார், மெய், மெய்!

-கெர்சோம் செல்லையா.