முடிவு கட்டும்!

முடிவு கட்டும்!
இறைவாக்கு: யோவான் 12:48-49.

48 – என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

49 – நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.  

இறைவாழ்வு:
நாக்கைச் சுழற்றி உரையாற்றுவதும், 
நன்மை அற்ற வினையாற்றுவதும்,
போக்கிடமறியா பொய்யின் வண்ணம்;
புண்ணின் தொடக்கம் நமது எண்ணம்.
தாக்கிடும் நோயைத் தடுத்தழிப்பதும்,
தந்த மகிழ்வைத் தொடர்ந்தளப்பதும்,
ஆக்கிடும் ஏசுவின் அருமைத் திட்டம்;
அவரருள் வாக்கே  முடிவு கட்டும்! 

ஆமென். 
கெர்சோம் செல்லையா.