மீட்பதே பணி!

மீட்பதே பணி! 

இறை வாக்கு: யோவான் 12::46-47.

இறை வாழ்வு: 

வேட்கை இன்று விண்வரை சென்று,
வெறித்தனமாக ஆடுவதால்
மீட்பை விட்டு விடுபவர் கெட்டு,
மீளாத் துயரில் வாடுகிறார்.
சேட்டை செய்து சிறுமையும் எய்து,
சேதம் கண்டவர் தேடுவதால்,
ஆட்டை நடத்தி, அன்பில் கிடத்தி,
அருளும் கோனால் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.