எங்கள் வழியாய்…..

இறை வாக்கு: யோவான் 12: 38-41.

இறை வாழ்வு:


எங்கள் வழியாய் இறையுரை கேட்டும்,

ஏற்க மறுப்பவர் இங்குண்டு. 

தங்கள் வழியால் விண்ணகம் எட்டும்,

தகுதி நிறைந்தவர் எங்குண்டு?

மங்கள வாழ்வில் நாட்டம் காட்டும்,

மாந்தர் உள்ளிலும் இருளுண்டு. 


திங்கள் ஒளிபோல் மகிழ்ச்சி கூட்டும்,

தெய்வ வழியிலே அருளுண்டு!


ஆமென். 

கெர்சோம் செல்லையா.