கொலைவெறி!

நற்செய்தி: யோவான் 12:9-11. 

நல்வழி:


வெறுக்கத் தொடங்கும் நெஞ்சு வளர்ந்து,

வெறியில் நிரம்பி வழிவது பார். 

நொறுக்கத் துடிக்கும் தீவினை கலந்து,

நேர்மையின் மேல் பொழிவது பார்.

பொறுத்துப் போகும் பண்பு குறைந்து,

புவியை விட்டு ஒழிவது பார். 

நிறுத்துப் பார்க்கும் இயேசு மறந்து

நில்லார் என்று மொழிவது யார்? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

முன்னறிவிப்பு!

முன்னறிவிப்பு!
நற்செய்தி: யோவான் 12: 7-8. 

7. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

8. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.

நல்வாழ்வு: 

எனது நடையின் அடுத்த நகர்வு,
எங்கே எப்படி என்றறியேன்.
தனது பணியின் இறுதி நிகழ்வை, 
தலைவரே முன்னுரைத்தார்.
மனது வைத்து அருளுமாறு,
மண்டியிட்டு நானின்றேன்.
கனிவு இரக்கம் அன்பு காட்டி,
காலடியே என்றுரைத்தார்! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

உயிர்த்தெழுதல் வாழ்த்து!

இயேசுவின் உயிர்த்தெழுதல்!

பிறப்பின் முடிவு இறப்பு என்று 

பேசுகின்ற  மாந்தர் முன்,

இறப்பின் பின்பு  வாழ்வு உண்டு,

என்கிறார் ஏசு உயிர்த்து.

திறப்பின் வாசல் இதுவே என்று,

தேடுவார்க்கு  அவர் பின்,

சிறப்பு வாழ்வு ஒன்று உண்டு;

சேர்வோம் நாம் உயிர்த்து!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

இல்லார் பெயரைச் சொல்லி!

இல்லார் பெயரைச் சொல்லி!

நற்செய்தி: யோவான் 12: 4-6.

4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

நல்வாழ்வு:

இல்லார் அடைய வழங்குவதற்கு,

இங்கே பலரும் வாங்கினார்.

நல்லாராகக் காட்டிய பிறகு,

நன்கொடைமேல் தூங்கினார்.

எல்லாரையும் அறிந்த இறையோ,

இவரைத் திருத்த ஏங்கினார்.

பொல்லாராகத் தொடரின் அழிவார்;

புரிந்தால், இறையே தாங்குவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

புனித வெள்ளிச் செய்தி!

புனித வெள்ளிச் செய்தி!

வீட்டின் வளமென எண்ண வைத்து,

விரும்பார் ஒழித்து, வெல்கிறார்.

நாட்டின் நலமென நம்ப வைத்து,

நல்லூர் அழிக்கச் சொல்கிறார்.

ஏட்டில் மட்டும் கற்றார் இவரும்,

இறையறிவின்றிச் செல்கிறார்.

கேட்டை விரும்பின் கெட்டு விழுவார்;

கிறித்துவை இன்றும் கொல்கிறார்!

– கெர்சோம் செல்லையா.

நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!
நல்வாழ்க்கை எது?

அன்பில் தொடங்கும் வாழ்க்கை,

அன்பாய் நடப்பதே  நன்மை. 

நன்மைப் புரியட்டும்  வாழ்க்கை – இது 

நல்லிறையின் தன்மை!


-கெர்சோம் செல்லையா.

நன்றி!

நன்றி!

இறைவாக்கு: யோவான் 12:1-3.  

1. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.

3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.  

இறைவாழ்வு:

விருந்து சமைத்து, படைப்பதும் நன்றி;
விரும்பி நளதம் உடைப்பதும் நன்றி. 
அருந்த தண்ணீர் கொடுப்பதும் நன்றி.
அன்புச் சொற்கள் தொடுப்பதும் நன்றி. 
திருந்துபவரில் தெரியட்டும் நன்றி. 
தீப்பந்தமாக எரியட்டும் நன்றி. 
புரிந்த நெஞ்சில் பெருகட்டும் நன்றி.
புரிய வைத்து, உருகட்டும் நன்றி!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இருவேறு வழியினர்

இரு வேறு எண்ணம்!

நற்செய்தி: யோவான் 11: 55-57.55.

யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56. அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.57. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

நல்வாழ்வு:

இரு வழி முறைகள் கொண்டார்,

இறை அடிவாரம் கண்டார்.

ஒரு சிலர் தூய்மை என்றார்;

உள்ளில் பெற்று நின்றார்.

மறு கரை மனிதரும் வந்தார்;

மனதின் தீதைத் தந்தார்.

திருவருள் தேடின் கொள்வார்;

தேடாவிட்டால் வீழ்வார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.