நன்றி!

நன்றி!

இறைவாக்கு: யோவான் 12:1-3.  

1. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.

3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.  

இறைவாழ்வு:

விருந்து சமைத்து, படைப்பதும் நன்றி;
விரும்பி நளதம் உடைப்பதும் நன்றி. 
அருந்த தண்ணீர் கொடுப்பதும் நன்றி.
அன்புச் சொற்கள் தொடுப்பதும் நன்றி. 
திருந்துபவரில் தெரியட்டும் நன்றி. 
தீப்பந்தமாக எரியட்டும் நன்றி. 
புரிந்த நெஞ்சில் பெருகட்டும் நன்றி.
புரிய வைத்து, உருகட்டும் நன்றி!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.