இருவேறு வழியினர்

இரு வேறு எண்ணம்!

நற்செய்தி: யோவான் 11: 55-57.55.

யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56. அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.57. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

நல்வாழ்வு:

இரு வழி முறைகள் கொண்டார்,

இறை அடிவாரம் கண்டார்.

ஒரு சிலர் தூய்மை என்றார்;

உள்ளில் பெற்று நின்றார்.

மறு கரை மனிதரும் வந்தார்;

மனதின் தீதைத் தந்தார்.

திருவருள் தேடின் கொள்வார்;

தேடாவிட்டால் வீழ்வார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.