புனித வெள்ளிச் செய்தி!

புனித வெள்ளிச் செய்தி!

வீட்டின் வளமென எண்ண வைத்து,

விரும்பார் ஒழித்து, வெல்கிறார்.

நாட்டின் நலமென நம்ப வைத்து,

நல்லூர் அழிக்கச் சொல்கிறார்.

ஏட்டில் மட்டும் கற்றார் இவரும்,

இறையறிவின்றிச் செல்கிறார்.

கேட்டை விரும்பின் கெட்டு விழுவார்;

கிறித்துவை இன்றும் கொல்கிறார்!

– கெர்சோம் செல்லையா.