இல்லார் பெயரைச் சொல்லி!
நற்செய்தி: யோவான் 12: 4-6.
4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
நல்வாழ்வு:
இல்லார் அடைய வழங்குவதற்கு,
இங்கே பலரும் வாங்கினார்.
நல்லாராகக் காட்டிய பிறகு,
நன்கொடைமேல் தூங்கினார்.
எல்லாரையும் அறிந்த இறையோ,
இவரைத் திருத்த ஏங்கினார்.
பொல்லாராகத் தொடரின் அழிவார்;
புரிந்தால், இறையே தாங்குவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.