கொலைவெறி!

நற்செய்தி: யோவான் 12:9-11. 

நல்வழி:


வெறுக்கத் தொடங்கும் நெஞ்சு வளர்ந்து,

வெறியில் நிரம்பி வழிவது பார். 

நொறுக்கத் துடிக்கும் தீவினை கலந்து,

நேர்மையின் மேல் பொழிவது பார்.

பொறுத்துப் போகும் பண்பு குறைந்து,

புவியை விட்டு ஒழிவது பார். 

நிறுத்துப் பார்க்கும் இயேசு மறந்து

நில்லார் என்று மொழிவது யார்? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.