அடிமை!

நல்வழி: யோவான் 8: 33-34.


யாருக்கும் அடிமை இல்லை என்று,

யாவரும் கூறும் பழக்கமுண்டு. 

பேருக்குப் பின்னால் சாதியும் போட்டு,

பெருமை காட்டும் வழக்கமுண்டு. 

நேருக்குந்நேராய் இறை முன் வந்தால்,

நெஞ்சின் அழுக்கு புரியவரும்.

ஊருக்குத் தெரியா அடிமைத்தனங்கள்

ஓடிட, விடுதலை தெரியவரும்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.