திருந்தும் திருடனும், திருந்தா மனிதரும்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:40-42.


40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.  


கிறித்துவில் வாழ்வு:  


இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,  

என்று நழுவும் நண்பர்களே,  

உறுதியாக உம்மில் வருமோ,  

உணர்ந்த கள்வன் பண்புகளே?  

அறுதி நேரம் அறியா வாழ்வில்,  

அளிக்கும் நொடிகள் செல்வங்களே.   

கருதி இன்றே திருந்தினால்தான்,     

கடவுள் ஏற்பார், பிள்ளைகளே! 


ஆமென்.  


-கெர்சோம் செல்லையா.    

Leave a Reply