நம் வேண்டல் என்ன?

நம் வேண்டல் என்ன?  


கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:34.  

34  அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  


நிந்தை சுமக்கும் நேரங்களில், 

இந்த மாந்தர் என் செய்வார்?  

சொந்த விடுதலை கேட்பவராய்,  


நொந்து அழுது வேண்டிடுவார். 


அந்த சிலுவையில் ஆண்டவரோ,  


விந்தை வாக்கால் பேசுகிறார்.  


தந்தை இறையின் மன்னிப்பை,  


மந்த கயவர்க்கு வேண்டுகிறார்.  


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.