தூக்க இயலா குருசு!

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:26.  

26  அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  
தூக்க இயலா குருசெடுத்து,
துன்புறு இயேசு விழும்போது,  
நோக்க வந்த சீமோன்மீது,  
நோவு வைத்தது தீது.
ஆக்கமில்லா வழிவிடுத்து, 
அடியரென்று வாழும்போது, 
தாக்க வந்தால் அது தடுத்து, 
தாங்கிக் காப்பது, தூது!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.