தவறான தீர்ப்பு!

தப்பான தீர்ப்பு!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23:24-25.  

24  அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

25  கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்பிழையும் செய்யாத 

இயேசுவைக் கொல்கின்றார்.  

அப்பழுக்காம் பரபாசை, 

அழைத்தும் செல்கின்றார்.    

தப்புகளைத் தருமமென்று,  

தலைவர்களும் சொல்கின்றார்.    

இப்புவியில் இத்தவற்றை,  

எதிர்ப்பவரே வெல்கின்றார்!

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.