யாரை விடுவிப்பீர்?  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 23: 17-19.  

17  பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.

18  ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.

19  அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலை பாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.  

கிறித்துவில் வாழ்வு:  

யாரை விடுவிப்பார் என்று,  

இன்று கேட்பின் இந்நாட்டில்,  

ஊரை ஏய்ப்பார் விடுதலையாவார்.  

உண்மைதானே, நண்பர்களே?   

நீரை இன்று பாலே என்று,  

நீட்டுவோரின் கூட்டமைப்பில்,  

கூரை இல்லா எளியவருக்கு,   

கொடாரே நீதி, எண்ணுங்களே!  

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.