கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!
புவியினில் தோன்றிய மனிதர்களில்,
புனிதர் இவர்போல் ஒருவரில்லை.
அவர்களில் அறிஞரை எண்ணுகையில்,
அருள்தர ஏசுபோல் யாருமில்லை.
இவரது பிறப்பின் அதிசயம்போல்,
யாரும் மண்ணில் பிறக்கவில்லை.
தவறிடும் மனிதர் உணருகையில்,
தருகிற வாழ்வும் இறப்பதில்லை!
-கெர்சோம் செல்லையா.
“இறையன்பு இல்லம்”,
எண். 24, செக்ரெட்டேரியட் காலனி,
இலட்சுமிபுரம், இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை- 600099.