கூட்டம் கூட்டி!

கூச்சல் !

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:20-22.
20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.22 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.


கிறித்துவில் வாழ்வு:
கூட்டங்கூட்டி கூச்சலெழுப்பி,

குருசிலறையக் கேட்போரே,

சாட்டுங்குற்றம் பொய்யோயென்று,

சற்றேனும் நீர் நினைத்தீரா?

ஆட்டம்போடும் அநீதி யாவும்,

அப்படியுமக்கே எதிராயின்,

வாட்டந்தீர்க்க யார் வருவார்?

வருந்தும் நாளை நினைப்பீரா?

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply