பேசாமல் பேசுகிறார்!

பேசாமல் பேசும் இயேசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:8-9.  

8   ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,

9   அநேக காரியங்களைக் குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.  

கிறித்துவில் வாழ்வு:  

காண விரும்பும் ஏரொது.

காட்டும் ஆவல் புரியுது.  

நாண மறுக்கும் அவனது,   

நஞ்சு நெஞ்சும் பெரியது.

வாண வெடியைப் போலிது 

வராத தூது, அரியது.  

பேண மறுக்கா மகனது, 

பேசா வாக்கில் தெரியுது! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply