சேய்கள் நாமே!

சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.

25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?

கிறித்துவில் வாழ்வு:
உண்ணக் கவலை, உடுக்கக் கவலை,
உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை.
எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன?
எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே!
விண்ணின் அருளால் வாழும் நமக்கு,
வேண்டாம் இந்த நோய்தரும் கவலை.
கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்;
காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே!
ஆமென்.

காகத்தைக் கவனிப்போம்!

காகங்களைக் கவனியுங்கள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:24.

2காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
கூடிழந்து, குஞ்சிழந்து,
குரலினிமை தானிழந்து,
பாடுகின்ற காக்கைக்கு,
பசிக்குணவு தருமிறையே,
தேடுகின்ற அடியனுக்கு,
தேவையெது, என்றறிந்து,
கோடிகள் குவிக்குமன்பு,
குறையாது, பெருநிறைவே!
ஆமென்.