என்னினம், என் மதம்!

என்னினம், என் மதம்!

என்னினம், என் மதம், என்ற வெறியும்,

உன்னினம், உன் மதம், என்ற வெறுப்பும்,
வன்னினமாகி, பின்னினம் அழிப்பின்,

இன்னிலம் எப்படி நன்னிலமாகும்?

என்னினம் எனாமல், நம்மினமாக்கும்.


உன் மதமென்பதைச் சம்மதமாக்கும்.

வன்னினம் மறையும், நன்னினமாகும்;

இன்னிலம் இனிமேல் நன்னிலமாகும்!


-கெர்சோம் செல்லையா.