கவலை விடுவீர்!

கவலைப்படாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.

22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.

கிறித்துவில் வாழ்வு:
உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா?
உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா?
பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா?
பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா?

வயிறை நிரப்பும் கவலை விடாரே,
வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே!
மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே,
மன்னித்தும்மைக் காத்திட்டாரே!
ஆமென்.