அன்பு, அன்பு!

அன்பு! அன்பு!

இந்து சமண பௌத்தர் இன்று,
இசுலாம் கிறித்தவ ரோடிணைந்து,
வந்த பிணக்கம் யாவும் மறந்து,
வாழ வேண்டும் இந்தியர் என்று!
முந்து நாளில் செய்தத் தவறு,
முதலில் போக, இறையை நம்பு.
சொந்தமில்லை வேறு நமக்கு;
சொல்லுகின்றார், அன்பு, அன்பு!

-கெர்சோம் செல்லையா.