ஒரு வழிச் சாலை!

ஒரு வழிச் சாலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:3-6.
3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

கிறித்துவில் வாழ்வு:
பள்ளம் எல்லாம் நிரம்பிட வேண்டும்;
பாறைக் குன்றுகள் இறங்கிட வேண்டும்.
முள்ளும் காடும் முறிந்திட வேண்டும்;
முதற்கண் நேர்வழி திறந்திட வேண்டும்.
அள்ளும் மனிதர் அறிந்திட வேண்டும்;
ஆண்டவர் வழியை தெரிந்திட வேண்டும்!
துள்ளும் குழந்தையாய் நடந்திட வேண்டும்;
தூய்மையில் மட்டுமே கடந்திட வேண்டும்.
ஆமென்.

துவையல் ஆகாதிருப்பதற்கு…….

துவையல் ஆகாதிருப்பதற்கு…….

இவைகள் தவறு என்றுணர்ந்து,
இனிநான் செய்யேன் என்றோமா?
எவைகள் நேர்மை என்றறிந்து,
யானும் செய்வேன் என்போமா?
அவையில் நன்றாய் பேசிவிட்டு,
அதற்கு எதிராய்ச் சென்றோமா?
துவையல் ஆகாதிருப்பதற்கு,
தூய்மை நாடிச் செல்வோமா?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

Comments