நிலைவாழ்வு எங்கே?

நிலைவாழ்வு எங்கே?

இலையுதிர் காலம் என்பவரே,
இங்கு விழுவதோ பழங்களே!
மலைபோல் உயர்ந்து நின்றவரே,
மறைய இவரிலை கிழங்களே.
சிலையென அமர்ந்த வீட்டாரே,
செய்தி கேட்டு எழுங்களே.
நிலை வாழ்வெங்கெனக் கேட்டீரே.
நேர்மை இறையிடம், தொழுங்களே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: Bhakther Solomon, smiling, close-up

அறிவின் எல்லை!

அறிவு இல்லை, அறிவின் எல்லை!

வாழ்வு வழியாம் உண்மை விட்டு,
வையம் கொடுக்கும் உயர்வைப் பெற்று,
ஆள்வேன் நானும் புவிமேல் என்று, 
அடியன் சென்றால் அறிவு இல்லை!

தாழ்வில் என்னைக் கண்டுகொண்டு,
தாங்கி என்னைச் சுமந்துகொண்டு,
பாழ்பட்டோரை மீட்க இன்று,
பயன்படுத்துபவரே, அறிவின் எல்லை!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: text