ஒரு வழிச் சாலை!

ஒரு வழிச் சாலை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:3-6.
3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

கிறித்துவில் வாழ்வு:
பள்ளம் எல்லாம் நிரம்பிட வேண்டும்;
பாறைக் குன்றுகள் இறங்கிட வேண்டும்.
முள்ளும் காடும் முறிந்திட வேண்டும்;
முதற்கண் நேர்வழி திறந்திட வேண்டும்.
அள்ளும் மனிதர் அறிந்திட வேண்டும்;
ஆண்டவர் வழியை தெரிந்திட வேண்டும்!
துள்ளும் குழந்தையாய் நடந்திட வேண்டும்;
தூய்மையில் மட்டுமே கடந்திட வேண்டும்.
ஆமென்.

Leave a Reply