அறிவைத் தாரும் ஆண்டவரே!

அறிவைத் தாரும் ஆண்டவரே!
இறைவாக்கு: லூக்கா 2:48-50.
48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இறைவாழ்வு:
காணும் கண்கள் இரண்டிருந்தும்,
காட்சியின் பொருளோ தெரியவில்லை.
பேணும் காதுகள் இரண்டிருந்தும்,
பேச்சின் ஆழமும் புரியவில்லை.
நாணும் என்னை உதறாமல்,
நல்லறிவாலே திருத்திடுமே.
வேணும் எனக்கு உம் கண்ணும்,
விண்ணின் காதும், பொருத்திடுமே!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment