பெற்றோர் நேர்மை

பெற்றோர் நேர்மை பிள்ளையில் உண்டோ?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:8.
8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்றோர் நேர்மையைப் பிள்ளையில் கண்டு,
பெரிதும் மகிழ்ந்த இனமெங்கே?
மற்றோர் வந்து தூற்றிச் செல்லும்,
மானம் கெட்டோர் தானிங்கே!
பற்றால் கிறித்துவை பார்த்துக் கொண்டு,
பண்பில்லாவிடில் பயனெங்கே?
கற்றோர் காதின் அழுக்கினுள்ளே,
கருத்தாய் முழங்குவாய் சங்கே!
ஆமென்.

Image may contain: 10 people, people standing and outdoor
LikeShow More Reactions

Comment