நம்புவீர்!

நம்புவீர்!

இறை மொழி: யோவான் 20: 9-10.

9. அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

10. பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

இறை வழி:

ஊனுடல் உயிர்ப்பை ஒவ்வார் இன்று,

உண்மை இல்லை என்கிறார்.

வானுடல் எடுத்து வாழ்வோமென்று,

வாய்மை மறந்து தின்கிறார்.

பேணுடல் தொழிலே பெரிதெனக் கொண்டு,

பிழைத்தால் எப்படி உண்ணுவார்?

நாணுவராகி, நலிவினைக் கண்டு

நம்பின், நன்மை எண்ணுவார்!

ஆமென்.

May be an image of text that says 'He IS RISEN John 20:1-9'