கடல் மேல் நடந்தவரே!

கடல் மேல் நடந்தவரே!
நற்செய்தி: யோவான் 6:19-22.  19.

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
22. மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள்.


நல்வழி:


கடலைப் பிளந்தும், வழி அமைத்தீர்;

கடல்மேல் நடந்தும், கரை அடைந்தீர்.

உடலுக்குயிரைக் கொடுப்பவர் நீர்.

உம்மை விழுங்குமோ கடலின் நீர்? 

விடலைப் பருவத்தில் அஞ்சுகிறார்.

விளங்காதவரும் மிஞ்சுகிறார்.

திடமாய் விடாது பிடிப்பவர் யார்?

தெய்வம் பிடித்தவரே அடியார்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply