மின்தூக்கி பொருத்துவதாய் என்வீடு வந்தார்.
நன்மதி இல்லாதோர் நான்கு இலட்சம் எடுத்தார்.
பன்னெடு நாட்கள் துன்பந்தான் தந்தார்.
இன்னாளில் இறைமகனோ, நல்தீர்ப்பு கொடுத்தார்.
நன்றிகூறும்,
கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
மின்தூக்கி பொருத்துவதாய் என்வீடு வந்தார்.
நன்மதி இல்லாதோர் நான்கு இலட்சம் எடுத்தார்.
பன்னெடு நாட்கள் துன்பந்தான் தந்தார்.
இன்னாளில் இறைமகனோ, நல்தீர்ப்பு கொடுத்தார்.
நன்றிகூறும்,
கெர்சோம் செல்லையா.
இயேசுவாக மாறுவோம்!
உண்மை இறைவன் நமைப் படைத்தாரே;
உடல் பொருள் ஆவியில் அறிவடைத்தாரே.
அன்பாய் வாழும் வழி கொடுத்தாரே;
அறம் விட்டவரோ, பழி எடுத்தாரே.
மண்ணில் மகனாய், இறை பிறந்தாரே;
மன்னிப்பென்னும் அருள் திறந்தாரே.
என்னே அன்பென இதை நினைப்பாரே,
இயேசுவாக, இறை இணைப்பாரே!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
24, செயலகக் குடியிருப்பு, இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,சென்னை-600099.
வேளையறிந்து கொடுப்பவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:29-30.
29ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். |
30இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். |
கிறித்துவில் வாழ்வு: வேளையறிந்து ஊணுடையளிக்கும், விண்ணின் அரசைப் போற்றுகிறேன். நாளைக்கென்று நமக்குச் சேர்க்கும், நல்லிறையைத்தான் ஏற்றுகிறேன். ஆளைப் பார்த்துக் கையேந்தாமல், அவர் புகழ்மாலை சாற்றுகிறேன். தாளைப் பிடித்துத் தாழ்ந்துபோகும் தரணிமீள உரை ஆற்றுகிறேன்! ஆமென். |
காட்டுப் பூக்களின் அழகு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:27-28.
27காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
கிறித்துவில் வாழ்வு:
காட்டு மலர்கள் மலரும் காட்சி,
காணக் கிடைக்கா நல்லின்பம்.
கேட்டு நீவிர் எழுத முயன்றால்,
கிட்ட வராது சொல்லின்பம்.
போட்டி போட்ட அரசருடையே,
போதாதென்பது இறையெண்ணம்.
ஆட்டுவிக்கும் அவரே இன்பம்;
அதுதான் நமக்கு நிறைவெண்ணம்!
ஆமென்.
வாளும், வன்முறை ஆயுதமும்,
வாழ்வின் வழிமுறையேயென்றால்,
தாழும் அவரது உள்மதிப்பு,
தலைவன் என்றே இருந்தாலும்.
ஆளும் அரசரின் ஆயுதமாய்,
அன்பும் அறமும் இல்லையென்றால்,
கேளும், அவரது கதைமுடிவு,
கிணறாய் வளமே சுரந்தாலும்.
-கெர்சோம் செல்லையா.
சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.
25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். |
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? கிறித்துவில் வாழ்வு: உண்ணக் கவலை, உடுக்கக் கவலை, உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை. எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன? எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே! விண்ணின் அருளால் வாழும் நமக்கு, வேண்டாம் இந்த நோய்தரும் கவலை. கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்; காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே! ஆமென். |
காகங்களைக் கவனியுங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:24.
2 | காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கிறித்துவில் வாழ்வு: கூடிழந்து, குஞ்சிழந்து, குரலினிமை தானிழந்து, பாடுகின்ற காக்கைக்கு, பசிக்குணவு தருமிறையே, தேடுகின்ற அடியனுக்கு, தேவையெது, என்றறிந்து, கோடிகள் குவிக்குமன்பு, குறையாது, பெருநிறைவே! ஆமென். |
என்னினம், என் மதம்!
என்னினம், என் மதம், என்ற வெறியும்,
உன்னினம், உன் மதம், என்ற வெறுப்பும்,
வன்னினமாகி, பின்னினம் அழிப்பின்,
இன்னிலம் எப்படி நன்னிலமாகும்?
என்னினம் எனாமல், நம்மினமாக்கும்.
உன் மதமென்பதைச் சம்மதமாக்கும்.
வன்னினம் மறையும், நன்னினமாகும்;
இன்னிலம் இனிமேல் நன்னிலமாகும்!
-கெர்சோம் செல்லையா.
அன்பு! அன்பு!
இந்து சமண பௌத்தர் இன்று,
இசுலாம் கிறித்தவ ரோடிணைந்து,
வந்த பிணக்கம் யாவும் மறந்து,
வாழ வேண்டும் இந்தியர் என்று!
முந்து நாளில் செய்தத் தவறு,
முதலில் போக, இறையை நம்பு.
சொந்தமில்லை வேறு நமக்கு;
சொல்லுகின்றார், அன்பு, அன்பு!
-கெர்சோம் செல்லையா.
கவலைப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.
22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. கிறித்துவில் வாழ்வு: உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா? உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா? பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா? பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா? வயிறை நிரப்பும் கவலை விடாரே, வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே! மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே, மன்னித்தும்மைக் காத்திட்டாரே! ஆமென். |